Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை: தருண் விஜய்

இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை: தருண் விஜய்

இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை: தருண் விஜய்
, வெள்ளி, 25 மார்ச் 2016 (00:27 IST)
இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும் என பாஜக எம்பி தருண் விஜய் தெரிவித்துள்ளார்.
 
சென்னையை அடுத்துள்ள புழல் அகதிகள் முகாமில் இலங்கை அகதிகள் வாழ்கின்றனர்.
அங்கு, பாஜகவை எம்பி தருண் விஜய் சந்தித்து பேசினார்.
 
பின்பு, பாஜக எம்பி தருண் விஜய் செய்தியாளர்களிடம் கூறுகையில், இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும், வேலை வாய்ப்புகளை அளிக்க வேண்டும் என்று அகதிகள் கோரிக்கை வைத்துள்ளார். இந்த கோரிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நிச்சயம் பரிசீலிக்கும் என்று உறுதி அளித்தார். 

Share this Story:

Follow Webdunia tamil