Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை அரசை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் ஜி.கே. வாசன் கோரிக்கை

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2015 (02:22 IST)
இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றம் குறித்து, சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என தமாகா வலியுறுத்தியுள்ளது.
 

 
இது குறித்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றம் குறித்த விசாரணைக்கு, இலங்கை அரசு முறையாக ஒத்துழைக்கவில்லை என்று, ஐ.நா. சபையின் மனித உரிமை அமைப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது இலங்கை அரசு உண்மை முகத்தை தெரியப்படுத்தியுள்ளது.
 
இலங்கையில் போரின் போது, இலங்கை ராணுவத்தினர், பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர் என்ற குற்றசாட்டு உள்ளது.  அதே போல, உலகத்திலேயே போர் சமயங்களில், பத்திரிகையாளர்கள் அதிக அளவில் படுகொலை செய்யப்பட்டது இலங்கையில் தான். எனவே, இலங்கை அரசை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும். இதன் மூலம், உண்மை குற்றவாளிகள் உலகிற்கு அம்பலப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். 
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!