Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளா பெண் சாமியாருக்கு இசெட் பிரிவு பாதுகாப்பு: மத்திய அரசின் சாமியார் பாசம்!

கேரளா பெண் சாமியாருக்கு இசெட் பிரிவு பாதுகாப்பு: மத்திய அரசின் சாமியார் பாசம்!

Webdunia
புதன், 10 மே 2017 (17:26 IST)
யோகா குரு எனப்படும் சாமியார் பாபா ராம்தேவுக்கு மத்திய அரசு இசெட் பிரிவு பாதுகாப்பு வழங்கியிருந்தது. இதனையடுத்து தற்போது இரண்டாவதாக கேரளா பெண் சாமியார் மாதா அமிர்தானந்தமயிக்கும் இசெட் பிரிவு பாதுகாப்பு அளித்துள்ளது மத்திய அரசு.


 
 
மாதா அமிர்தானந்தமயி கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் அதனது ஆசிரமத்தை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஆன்மீக நிறுவனங்களை நடத்தி வருகிறார். 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் அறக்கட்டளைகள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கல்வி நிலையங்கள் நடத்தி வருகிறார்.
 
இந்நிலையில் 64 வயதான பெண் சாமியார் மாதா அமிர்தானந்தமயிக்கும் அவரது ஆசிரமத்துக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுத்துறை அறிக்கை அளித்ததை அடுத்து அவருக்கு இசெட் பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 
இதன் மூலம் அவருக்கு சுமார் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிப்பார்கள். பாபா ராம்தேவுக்கு பிறகு இசெட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படும் இரண்டாவது ஆன்மீக தலைவர் மாதா அமிர்தானந்தமயி தான்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் தலைவிதியை ஏன் இப்படி எழுதினாய்? சிவபெருமானுக்கு கடிதம் எழுதி இளைஞர் தற்கொலை..!

ரகசிய கேமராவுடன் ஸ்மார்ட் கண்ணாடி அணிந்து சென்ற பக்தர்.. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் கைது!

கடலூர் ரயில் விபத்தில் இறந்த பள்ளி மாணவர்கள்.. முதல்வர் ஸ்டாலின் நிவாரண அறிவிப்பு..!

நேற்றும் இன்றும் மந்தமான வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தை.. நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

சரக்கு குடிச்சிருந்தார்.. தமிழும் தெரியல..! வடக்கு கேட் கீப்பர் மீது பொதுமக்கள் புகார்!

அடுத்த கட்டுரையில்
Show comments