Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷிண்டே மகனுக்கு துணை முதல்வர் பதவி? ஷிண்டேவுக்கு உள்துறை.. மகாராஷ்டிரா நிலவரம்..!

Mahendran
திங்கள், 2 டிசம்பர் 2024 (13:31 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக இருந்த ஷிண்டே மகனுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட இருப்பதாகவும், ஷிண்டேவுக்கு உள்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில், முடிவு அறிவிக்கப்பட்டு ஒரு வாரம் ஆகியும் இன்னும் ஆட்சி அமையவில்லை. முதல்வர் பதவியை பாஜகவுக்கு தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் அஜித்  பவார்   தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கும் துணை முதல்வர் பதவி அளிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த் துணை முதல்வராக இருப்பதாகவும், ஷிண்டேவுக்கு உள்துறை அமைச்சர் பதவி வழங்க ஒப்புக் கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்று அல்லது நாளை, ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த் துணை முதல்வராக பதவி ஏற்பது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
 
டிசம்பர் 5ஆம் தேதி பாஜகவின் முதல்வராக பட்னாவிஸ் பதவி ஏற்க இருப்பதாகவும், அஜித் பவார் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய இருவரும் துணை முதல்வராக பதவியேற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தி தேசிய மொழி தான் என்பதில் சந்தேகமில்லை.. ஆனால்.. ஜெகந்நாதன் ரெட்டி பரபரப்பு கருத்து..!

மனைவியால் கொடுமைப்படுத்தப்பட்ட கணவனுக்கு விவாகரத்து: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த நபர் வெட்டி கொலை.. சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

சரோஜா தேவி மரணத்தை சித்தராமையா மரணம் என தவறாக மொழி பெயர்த்த மெட்டா.. கடும் கண்டனம்..!

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments