ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் பகுதியில் பணியாற்றி வரும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு அடுத்த மாதம் சிறப்பு யோகா முகாம் நடைபெற உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் பகுதியில் பணியாற்றி வரும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு சிறப்பு யோகா முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து, பதஞ்சலி யோக பீடத்தின் ஹரித்வார் பிரதிநிதி ஜெய்தீப் ஆர்யா கூறியதாவது:-
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு , செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி 12 ஆம் தேதி மற்றும் 13 ஆம் தேதி ஆகிய தேதிகளில் பாபா ராம்தேவ் சிறப்பு யோகா முகாம் நடத்தவுள்ளார். மேலும், யோகா பயிற்சி செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படுவதுடன் மன அழுத்தமும் குறையும் என்றார்.