Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜபக்‌ஷேவிற்கு பாரத ரத்னா விருது - சுப்பிரமணியசாமிக்கு சுப.வீரபாண்டியன் கண்டனம்

Webdunia
வியாழன், 23 அக்டோபர் 2014 (19:20 IST)
ராஜபக்‌ஷேவிற்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேன்டும் என்று கூறிய சுப்பிரமணியசாமிக்கு சுப.வீரபாண்டியன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஆளும் பாரதிய ஜனதா கட்சியில் முக்கியமானவர்களில் ஒருவர் என்று கூறிக்கொள்ளும் சுப்பிரமணியசாமி, லட்சக்கணக்கான தமிழ் உறவுகளைக் கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். சுப்பிரமணியசாமியின் அறிக்கை தமிழர்களுக்கும், தமிழின உணர்வுக்கும், மனிதநேயத்திற்கும் எதிரானதாக உள்ளது' என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும், அவர் மீது பாரதீய ஜனதா கட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்றால், பாஜகவின் நிலைப்பாடே அதுதான் என்று உறுதிப்படும் என்றும் ஒட்டுமொத்த தமிழினத்தின் கண்டனத்திற்கு உள்ளாகும் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

Show comments