Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை: இந்திய வானிலை ஆய்வு மையம்!

Webdunia
வியாழன், 8 ஜூன் 2023 (11:12 IST)
அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் வழக்கம் போல் ஜூன் ஒன்றாம் தேதி இந்த ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. 
 
ஆனால் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் கால தாமதம் ஆகி வரும் நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கேரளாவில் இந்த ஆண்டு ஒரு வாரம் தாமதமாக தென்மேற்கு பருவமழை தொடங்குவதாகவும் ஆனால் அதே நேரத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு நன்றாக பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
மேலும் இன்று முதல் 5 நாட்களுக்கு கேரளாவில் கன மழைக்கு வாய்ப்பு உண்டு என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments