Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை: இந்திய வானிலை ஆய்வு மையம்!

Webdunia
வியாழன், 8 ஜூன் 2023 (11:12 IST)
அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் வழக்கம் போல் ஜூன் ஒன்றாம் தேதி இந்த ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. 
 
ஆனால் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் கால தாமதம் ஆகி வரும் நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கேரளாவில் இந்த ஆண்டு ஒரு வாரம் தாமதமாக தென்மேற்கு பருவமழை தொடங்குவதாகவும் ஆனால் அதே நேரத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு நன்றாக பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
மேலும் இன்று முதல் 5 நாட்களுக்கு கேரளாவில் கன மழைக்கு வாய்ப்பு உண்டு என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments