Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி வரப்போவது கடினமானக் காலம் – ரேபரேலி மக்களுக்குக் கடிதம் !

Webdunia
திங்கள், 27 மே 2019 (08:53 IST)
17 ஆவது மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ள காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி தனது தொகுதி மக்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

17 ஆவது மக்களவைத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. நாடு முழுவதும் காங்கிரஸ் பெருந்தோல்வி அடைந்துள்ள நிலையில் அதன் பிரதான மாநிலங்களான உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் மொத்தமே 1 தொகுதியை மட்டுமே வென்றுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் ரேபரேலி தொகுதியில் அக்கட்சியின் சோனியா காந்தி வெற்றி பெற்றுள்ளார்.

தன்னை தேர்ந்தெடுத்ததற்காக அத்தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ‘ என்னை மீண்டும் தேர்ந்தெடுத்தற்கு நன்றி. கூட்டணிக் கட்சிகளுக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். வரக்கூடிய நாட்கள் நமக்கு மிகக் கடினமான காலமாக இருக்கப்போகிறது என்பதை நான் அறிவேன். ஆனால் உங்கள் துணையோடு அதைக் காங்கிரஸ் எதிர்கொள்ளும். இந்த நாட்டின் மாண்புகளைக் காப்பதற்காக எந்தத் தியாகத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments