Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி வரப்போவது கடினமானக் காலம் – ரேபரேலி மக்களுக்குக் கடிதம் !

Webdunia
திங்கள், 27 மே 2019 (08:53 IST)
17 ஆவது மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ள காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி தனது தொகுதி மக்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

17 ஆவது மக்களவைத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. நாடு முழுவதும் காங்கிரஸ் பெருந்தோல்வி அடைந்துள்ள நிலையில் அதன் பிரதான மாநிலங்களான உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் மொத்தமே 1 தொகுதியை மட்டுமே வென்றுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் ரேபரேலி தொகுதியில் அக்கட்சியின் சோனியா காந்தி வெற்றி பெற்றுள்ளார்.

தன்னை தேர்ந்தெடுத்ததற்காக அத்தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ‘ என்னை மீண்டும் தேர்ந்தெடுத்தற்கு நன்றி. கூட்டணிக் கட்சிகளுக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். வரக்கூடிய நாட்கள் நமக்கு மிகக் கடினமான காலமாக இருக்கப்போகிறது என்பதை நான் அறிவேன். ஆனால் உங்கள் துணையோடு அதைக் காங்கிரஸ் எதிர்கொள்ளும். இந்த நாட்டின் மாண்புகளைக் காப்பதற்காக எந்தத் தியாகத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுவது எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு.

ஒரு லாரியில் கேஸ், ஒரு லாரியில் மண்ணெண்ணெய்! வேகமாக வந்து மோதிய அரசு பஸ்! - அதிர்ஷ்டவசமாக தப்பிய மக்கள்!

திருமணத்திற்கு பிறகும் தனித்தனி கட்டில்.. இந்தியாவில் அதிகரிக்கும் ஸ்லீப் டைவர்ஸ்!

எங்கும் கருணாநிதி பெயர்.. எழும்பூர் ரயில் நிலையத்திற்கும் வைக்க கோரிக்கை..!

தங்கத்தை விற்க ஏடிஎம் மிஷின்.. 30 நிமிடங்களில் வங்கி அக்கவுண்டில் பணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments