Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது அணியை தடுக்க சோனியாவின் மாஸ்டர் பிளான்

Webdunia
புதன், 14 மார்ச் 2018 (09:00 IST)
பாஜக, காங்கிரஸ் அல்லாத 3வது அணியை அமைக்க மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவ் ஆகியோர் முயற்சி செய்த நிலையில் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறுவதை தடுக்க சோனியா காந்தி மாஸ்டர் பிளான் ஒன்றை செய்துள்ளார்.

இதன் காரணமாக டெல்லியில் 20 கட்சி முக்கிய தலைவர்களுக்கு நேற்று இரவு சோனியாகாந்தி விருந்தளித்தார். இந்த விருந்தில் திமுக சார்பில் கனிமொழி பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தற்போது இந்தியாவில் உள்ள 22 மாநிலங்களில் ஆட்சி செய்து வருகிறது. வலிமையான பாஜகவை தோற்கடிக்க பாஜகவின் எதிர்ப்பு வாக்குகள் அனைத்தையும் ஒன்றிணைக்க திட்டம் போட்ட சோனியா காந்தி, 20 கட்சிகளுக்கு விருந்தளித்து கூட்டணிக்கு அச்சாரமிட்டுள்ளார். ஆனாலும் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்கனவே கூட்டணி வைத்து பிரிந்து போன கட்சிகள் இதில் இருப்பதால் மீண்டும் கூட்டணி அமையுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments