3வது அணியை தடுக்க சோனியாவின் மாஸ்டர் பிளான்

Webdunia
புதன், 14 மார்ச் 2018 (09:00 IST)
பாஜக, காங்கிரஸ் அல்லாத 3வது அணியை அமைக்க மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவ் ஆகியோர் முயற்சி செய்த நிலையில் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறுவதை தடுக்க சோனியா காந்தி மாஸ்டர் பிளான் ஒன்றை செய்துள்ளார்.

இதன் காரணமாக டெல்லியில் 20 கட்சி முக்கிய தலைவர்களுக்கு நேற்று இரவு சோனியாகாந்தி விருந்தளித்தார். இந்த விருந்தில் திமுக சார்பில் கனிமொழி பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தற்போது இந்தியாவில் உள்ள 22 மாநிலங்களில் ஆட்சி செய்து வருகிறது. வலிமையான பாஜகவை தோற்கடிக்க பாஜகவின் எதிர்ப்பு வாக்குகள் அனைத்தையும் ஒன்றிணைக்க திட்டம் போட்ட சோனியா காந்தி, 20 கட்சிகளுக்கு விருந்தளித்து கூட்டணிக்கு அச்சாரமிட்டுள்ளார். ஆனாலும் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்கனவே கூட்டணி வைத்து பிரிந்து போன கட்சிகள் இதில் இருப்பதால் மீண்டும் கூட்டணி அமையுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments