Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுஷ்மாவை நலம் விசாரித்த சோனியா, ராகுல்

Webdunia
திங்கள், 20 ஏப்ரல் 2015 (19:38 IST)
அரசியல் வேறுபாடுகளை தள்ளிவைத்துவிட்டு, நாடாளுமன்றத்தில் இன்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவாரஜிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும் நலம் விசாரித்தனர்.
 
சோனியா காந்தி மீதான விமர்சனத்துக்காக அமைச்சர் கிரிராஜ் சிங் வருத்தம் தெரிவிக்கக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஏற்படுத்திய அமளி காரணமாக அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. அப்போது அந்த இடைவேளையில், சுஷ்மாவை சந்தித்து சோனியாவும், ராகுலும் நலம் விசாரித்தனர்.
 
இவர்களைத் தவிர காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் எம்.பி. ஜோதிராதித்ய சிந்தியா, ஆம் ஆத்மி கட்சியின் பகவத் மான், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரிய சூலே ஆகியோரும் நலம் விசாரித்தனர்.

சவுக்கு சங்கரை போல் பிரகாஷ்ராஜை கைது செய்ய வேண்டும்: நாராயணன் திருப்பதி..!

ஜெயலலிதா தீவிர இந்துத்துவா தலைவர் என்பதை அதிமுக உடன் விவாதிக்க தயார்: அண்ணாமலை

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலச்சரிவு.. உயிருடன் புதைந்த 2 ஆயிரம் பேர்...!

பரமாத்மா அனுப்பியதாக பிரதமர் மோடி கூறியதற்கு அதானி தான் காரணம்: ராகுல் காந்தி

நைஜீரியா: கிராமத்திற்குள் புகுந்து துப்பாக்கி முனையில் 160 பேரை கடத்திச் சென்றது யார்?

Show comments