Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன்மோகன் சிங், சோனியா, மற்றும் ராகுல் காந்தி கைது

Webdunia
வெள்ளி, 6 மே 2016 (15:00 IST)
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து பின்னர் விடுதலை செய்துள்ளனர்.
 

 
பாஜக ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் மீது குற்றம் சுமத்தியது, உத்தரகாண்ட் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது உள்ளிட்டவற்றை கண்டித்து ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள் என்ற பெயரில் டெல்லியில் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தியது.
 
இந்த பேரணியை தொடங்குவதற்கு முன்பு தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கட்சித் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி துணைத்தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னால் பிரதமர் மன்மோகன் சிங்க உள்ளிட்டோர் தொண்டர்களிடையே உரையாற்றினர்.
 
அப்போது மத்திய அரசுக்கு எதிரான பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். இதைத்தொடர்ந்து திரளான தொண்டர்களுடன் நாடாளுமன்றம் நோக்கி அவர்கள் பேரணியாக புறப்பட்டனர்.
 
நாடாளுமன்றத்தை சுற்றி தடை செய்யப்பட்ட பகுதி என்பதால் அப்பகுதியில் நுழைந்த சோனியா ராகுல் மற்றும் மன்மோகன் சிங்கை காவல் துறையினர் கைது செய்து பின்னர் விடுதலை செய்துள்ளனர்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments