Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுஷ்மா சுவராஜ் பதவி விலகும் வரை நாடாளுமன்றத்தை நடத்த விட மாட்டோம்: சோனியா

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2015 (16:38 IST)
சுஷ்மா சுவராஜ் மற்றும் 2 மாநில பாஜக முதலமைச்சர்கள் பதவி விலகும் வரை நாடாளுமன்றத்தை நடத்த விட மாட்டோம் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
 

 
டெல்லியில், இன்று நடைபெற்ற காங்கிரஸ் எம்பிக்கள் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், இதனை தெரிவித்தார். மேலும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால், யாரும் பொறுப்பில் இருந்து தப்பிவிட முடியாது என்றும் சோனியா குற்றம்சாட்டினார்.
 
லலித் மோடிக்கு உதவிய விவகாரத்தில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜும், ராஜஸ்தான் முதலமைச்சர்  வசுந்தரா ராஜேவும், வியாபம் முறைகேடு புகார் தொடர்பாக மத்தியப்பிரதேச மாநில முதலமைச்சர்  சிவராஜ் சிங் சவுஹானும் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
 
மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை தொடர்ந்து பின்பற்றி வருகிறது என்றும் விவசாயிகளின் தற்கொலை தொடர்பாக, மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் தெரிவித்த கருத்து, வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் இருப்பதாகவும் சோனியா காந்தி குற்றம்சாட்டினார்.

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

Show comments