தாத்தாவிடம் கடி வாங்கிய பாம்பு மரணம்: போலீஸ் வழக்கு பதிவு!!

Webdunia
புதன், 17 ஜூலை 2019 (11:13 IST)
குஜராத் மாநிலத்தில் தன்னை கடித்த பாம்பை முதியவர் ஒருவர் திரும்பி கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
குஜராத் மாநிலம் மஹிசாகர் மாவட்டத்தில் உள்ள அஜன்வா கிராமத்தை சேர்ந்த 60 வயது மதிக்கதக்க பார்வத் காலா பாரியா என்பவர் சம்பவம் தினத்தன்று சோளங்களை ஏற்றிக்கொண்டிருந்த லாரியின் அருகே நின்றிருந்தார். 
 
அப்போது எங்கிருந்தோ வந்த பாம்பு ஒன்று பார்வத்தின் கை மற்றும் முகத்தில் கடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர் அந்த பாம்பை பிடித்து பதிலுக்கு கடித்துள்ளார். கடி வாங்கிய பாம்பு அங்கேயே இறந்துவிட்டது. 
 
இதன் பின்னர் அங்கிருந்தவர்கள் பார்வத்தை அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் பாம்பின் அதிக விஷத்தன்மையால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
 
இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவி செய்துள்ள நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுகவிடம் பாஜக கேட்கும் தொகுதிகள்!.. எடப்பாடி பழனிச்சாமி ஷாக்!...

திமுக தங்கத்தையே கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்: செல்லூர் ராஜு

இருமுடி கட்டி போவாங்க! விஜய் ரசிகர் செய்த செயலால் கடுப்பான நெட்டிசன்கள்

கொல்கத்தா நிகழ்வின்போது ஏற்பட்ட குழப்பம்.. மெஸ்ஸியிடம் மம்தா பானர்ஜி வருத்தம்!

யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது: வீட்டின் கதவை உடைத்து கைது செய்ததாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments