Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாதத் தாக்குதல்: 3 போலீசார் உட்பட உட்பட 6 பேர் பலி

Webdunia
திங்கள், 27 ஜூலை 2015 (17:02 IST)
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு காவல்துறை அதிகாரி உட்பட 6 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நிகழ்ந்திருப்பது, ஜம்மு - காஷ்மீரின் எல்லைப் பகுதியை ஒட்டிய பகுதி என்பது கவனிக்கத்தக்கது.
 

 
பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மற்றொருவர் படுகாயம் அடைந்ததாகவும் பஞ்சாப் போலீசார் தெரிவித்தனர்.
 
மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், உயிரிழந்த 6 பேரில் பொதுமக்களில் 3 பேரும், ஒரு எஸ்.பி. உட்பட காவல் துறையைச் சேர்ந்த 3 பேரும் அடங்குவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, பஞ்சாப், டெல்லி, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் உல்லாச குளியல் ஆடும் சிறுவர்கள்

Show comments