Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாதுகாப்பு அதிகாரியை கன்னத்தில் அறைந்த சிவசேனா எம்.எல்.ஏ.

பாதுகாப்பு அதிகாரியை கன்னத்தில் அறைந்த சிவசேனா எம்.எல்.ஏ.
, வியாழன், 18 டிசம்பர் 2014 (17:02 IST)
மகாராஷ்டிரத்தில் சிவசேனைக் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேயின் பாதுகாப்பு அதிகாரியை அக்கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இது குறித்து காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:
 
நாகபுரியில் உள்ள தனியார் விடுதியொன்றில் சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அந்தக் கூட்டம் நடைபெற்ற அறையின் வெளியே பராக் ஜாதவ் என்ற சிறப்பு காவல் அதிகாரி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். 
 
அப்போது சிவசேனை எம்.எல்.ஏ. ஹர்ஷவர்தன் ஜாதவ் கூட்டம் நடந்து கொண்டிருந்த அறைக்குள் செல்ல முயன்றுள்ளார். அவரை பராக் ஜாதவ் தடுத்ததாகத் தெரிகிறது. இதனால் கோபமடைந்த ஹர்ஷவர்தன், பாதுகாப்பு அதிகாரியின் கன்னத்தில் அறைந்துள்ளார்.
 
இந்தச் சம்பவம் குறித்து சோனேகான் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil