Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவசேனா ஏக்நாத் அணி எம்.எல்.ஏ கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல்: மகாராஷ்டிராவில் பரபரப்பு

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2022 (11:54 IST)
சிவசேனா ஏக்நாத் அணி எம்.எல்.ஏ கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல்: மகாராஷ்டிராவில் பரபரப்பு
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணி தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் நிலையில் கட்சியின் எம்எல்ஏ ஒருவரின் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணி பிரிந்து பாஜக ஆதரவுடன் தற்போது ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில் இந்த அணியின் எம்எல்ஏ உதய்சந்த் என்பவரின் கார் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த காரை நோக்கி மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் காரின் கண்ணாடிகள் சேதம் அடைந்து உள்ளது
 
இது குறித்து காவல்துறையில் புகார் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதல் குறித்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியினர் கூறும்போது எம்எல்ஏ உதய்சந்த் வருவார் என்று எதிர்பார்த்து மறைந்திருந்து மர்ம நபர்கள் காத்திருந்ததாகவும் பின் தொடர்ந்து கற்களால் தாக்கியதாகவும் கூறுகின்றனர்
 
இதுபோன்ற சம்பவங்களால் தன்னை அச்சுறுத்த முடியாது என்று கூறியுள்ள உதய்சந்த் எம்.எல்.ஏ, மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படுத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments