Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீர சாவர்க்கர் பற்றி இப்படியா எழுதுவது? காங்கிரஸ் புத்தகத்துக்கு சிவசேனா எதிர்ப்பு!

Webdunia
சனி, 4 ஜனவரி 2020 (08:59 IST)
வீர சாவர்க்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் புத்தகம் எழுதியுள்ளதற்காக காங்கிரஸுக்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் சேவா தள பிரிவு மத்திய பிரதேசத்தில் “வீர சாவர்க்கர், கித்னே வீர்?” என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளது. அந்த புத்தகத்தில் சாவர்க்கர் அந்தமான் சிறையிலிருந்து வெளியே வந்த பின் ஆங்கிலேய அரசிடம் உதவித்தொகை பெற்றதாகவும், மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவிற்கும் சாவர்க்கருக்கும் உடல்ரீதியான உறவு இருந்ததாகவும் எழுதப்பட்டுள்ளது.

இந்த புத்தகம் சாவர்க்கர் குறித்த தவறான பிம்பங்களை மக்களிடையே ஏற்படுத்துவதாக மராட்டியத்தில் ஆளும் சிவசேனா கட்சி, கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த புத்தகத்தை மராத்தியில் வெளியிட கூடாது என்றும் சிவசேனா தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ராகுல் காந்தி சாவர்க்கர் குறித்து மேடையில் பேசிய விவகாரத்தில் சிவசேனா கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நாளை மறுநாள் வங்கக்கடலில் புதிய புயல்.. புயலுக்கு பெயர் வைத்த ஓமன் நாடு..!

58 தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் இன்று நிறைவு..! தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு..!!

என்னய்யா இதெல்லாம் எடுத்து வெச்சிருக்கீங்க.. வாழ்க்கை வரலாற்று படத்தில் ரேப் சீன்! – அதிர்ச்சியடைந்த டொனால்ட் ட்ரம்ப்!

ஜெயக்குமார் கொலை வழக்கு.! தனிப்படை போலீசார் திணறல்..! சிபிசிஐடிக்கு மாற்றம்...!!

ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும்..! பிரதமர் மோடிக்கு சித்தராமையா மீண்டும் கடிதம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments