Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மாத காலம் கொரோனா நீடித்தால்... நிர்மலா சீதாராமன் பரபர பேச்சு!!

Webdunia
புதன், 25 மார்ச் 2020 (10:45 IST)
இன்னும் 6 மாத காலம் வரை கொரோனா பாதிப்பு நீடித்தால் என்ன நடக்கும் என என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
 
சீனாவில் உருவெடுத்த கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதிலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 18 ஆயிரமாக உயர்ந்துள்ளது. 
 
குறிப்பாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்துள்ளதகாவும், கொரோனாவுக்கு குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 41 என மத்திய சுகாதார அமைச்சகம் சற்றுமுன் தகவல் வெளியிட்டுள்ளது. 
 
இந்தியாவில் இந்த தொற்று மேலும் பரவாமல் இருக்கு நள்ளிரவு முதல் நாடு முடுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்னும் 6 மாதங்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தால் திவால் சட்டத்தை மறு பரிசீலனை செய்யும் நிலை ஏற்படலாம் என நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார். 
 
இது குறித்து அவர் விரிவாக தெரிவித்ததாவது, கொரோனா அச்சம் இன்னும் 6 மாதங்களுக்கு நீடிக்குமானால் திவால் சட்டத்தின் சட்டப்பிரிவுகள் மாற்றம் குறித்து அரசு ஆலோசிக்கும். திவால் சட்டத்தின் கீழ் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கான அபராதத் தொகை ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
 
பெரிய அளவில் கடன் பெற்று கடன் தொகையை திருப்பிச் செலுத்தாதோருக்கான ஒழுங்குமுறையக் கொண்டு வர, வாராக்கடன் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் முயற்சியாகவே திவால் சட்டம் கடந்த 2016 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹோலி கொண்டாட மறுத்த இளைஞரை அடித்துக் கொன்ற கும்பல்! - ராஜஸ்தானில் அதிர்ச்சி!

மருத்துவக் கல்வியில் வசிப்பிட அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது.. தீர்ப்பை எதிர்த்து போராட்டம்..!

ஹோலி வண்ணங்களை எதிர்ப்பவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறலாம்: உ.பி. அமைச்சர் சர்ச்சை கருத்து

ஓசூரில் டைடல் தொழில்நுட்பப் பூங்கா..! தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு

இன்று ஒரே நாளில் சுமார் 880 ரூபாய் தங்கம் விலை உயர்வு.. 66 ஆயிரத்தை நெருங்கியது ஒரு சவரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments