Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்தன ரெட்டி கைது

Webdunia
சனி, 21 நவம்பர் 2015 (01:40 IST)
பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்தன ரெட்டியை சிறப்பு புலனாய்வுப் படையினர் கைது செய்தனர்.
 

 
கர்நாடகா மாநிலத்தில், சட்ட விரோத சுரங்கத் தொழில் மற்றும் நீதிபதிக்கு லஞ்சம் கொடுத்த குற்றம் போன்ற பல்வேறு வழக்குகளில் பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்தன ரெட்டியை கடந்த 2011 செப்டம்பர் 5 ஆம் தேதி சிபிஐ கைது செய்தது.
 
இதனையடுத்து, தன் மீது போடப்பட்ட சுமார் 13 வழக்குகளில் ஜாமீன் பெற்ற ஜனார்தன ரெட்டி மீது, லோக் ஆயுக்தா சிறப்பு புலனாய்வுப் படை போலீசார் புதிய வழக்கு வழக்கு பதிவு செய்தனர்.
 
இதற்காக, லோக் ஆயுக்த போலீஸார் முன்பு ஆஜராகுமாறு ஜனார்தன ரெட்டிக்கு சிறப்பு புலனாய்வுப்படை போலீசார் சம்மன் அனுப்பினர். இதனையடுத்து, லோக் ஆயுக்த போலீஸ் ஐஜிபி கே.எஸ்.ஆர்.சரண்ரெட்டி முன்பு விசாரணைக்கு ஜனார்தன ரெட்டி ஆஜரானார். அப்போது அவரை போலீசார் கைது செய்னர். 
 

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

Show comments