Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்தன ரெட்டி கைது

பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்தன ரெட்டி கைது
, சனி, 21 நவம்பர் 2015 (01:40 IST)
பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்தன ரெட்டியை சிறப்பு புலனாய்வுப் படையினர் கைது செய்தனர்.
 

 
கர்நாடகா மாநிலத்தில், சட்ட விரோத சுரங்கத் தொழில் மற்றும் நீதிபதிக்கு லஞ்சம் கொடுத்த குற்றம் போன்ற பல்வேறு வழக்குகளில் பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்தன ரெட்டியை கடந்த 2011 செப்டம்பர் 5 ஆம் தேதி சிபிஐ கைது செய்தது.
 
இதனையடுத்து, தன் மீது போடப்பட்ட சுமார் 13 வழக்குகளில் ஜாமீன் பெற்ற ஜனார்தன ரெட்டி மீது, லோக் ஆயுக்தா சிறப்பு புலனாய்வுப் படை போலீசார் புதிய வழக்கு வழக்கு பதிவு செய்தனர்.
 
இதற்காக, லோக் ஆயுக்த போலீஸார் முன்பு ஆஜராகுமாறு ஜனார்தன ரெட்டிக்கு சிறப்பு புலனாய்வுப்படை போலீசார் சம்மன் அனுப்பினர். இதனையடுத்து, லோக் ஆயுக்த போலீஸ் ஐஜிபி கே.எஸ்.ஆர்.சரண்ரெட்டி முன்பு விசாரணைக்கு ஜனார்தன ரெட்டி ஆஜரானார். அப்போது அவரை போலீசார் கைது செய்னர். 
 

Share this Story:

Follow Webdunia tamil