Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த கட்டணம் போதும்!

Webdunia
சனி, 28 மே 2016 (10:27 IST)
சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லவதற்கான குறைந்த கட்டண விமான சேவையை ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.
 

 
தென்னிந்தியாவில் உள்ள சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிங்கப்பூர், கோலாலம்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விமான போக்குவரத்து தேவையும் அதிகரித்துள்ளது.
 
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாக ஸ்கூட் ஏர்லைன்ஸ் சென்னை-சிங்கப்பூர், அமிர்தசரஸ்-சிங்கப்பூர் இடையே விமான போக்குவரத்தைக் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கியுள்ளது.
 
சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல ரூ.5500 என்ற குறைந்த கட்டணத்தில் இந்தச் சேவையை இந்நிறுவனம் தொடங்கியுள்ளதால் சிங்கப்பூர் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னை தவிர, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட இரண்டாம் கட்ட நகரங்களுக்கும் இந்தச் சேவையை நீடிப்பது குறித்து திட்டமிட்டுள்ளதாக ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைமை நிர்வாகி பாரத் மகாதேவன் கூறியுள்ளார்.
 
ஜெய்ப்பூர்-சிங்கப்பூர் இடையே வரும் அக்டோபர் மாதம் இதே போன்ற சேவை தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார். மற்ற நிறுவனங்களைப்போல் அல்லாமல் போயிங் டிரீம் லைன் விமானத்தை தங்கள் நிறுவனம் இயக்குவதால் ஒரே நேரத்தில் 300 பயணிகள் வசதியாக பயணிக்கமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8,000க்கும் அதிகமான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி.. தடுமாறும் தமிழக கல்வித்துறை..!

பா.ஜ.,வுக்கும், விஜய்க்கும் ஒரே நோக்கம் தான்: இன்னும் நம்பிக்கையுடன் இருக்கும் நயினார் நாகேந்திரன்

சகோதரனுக்கு சகோதரியுடன் திருமணம்! இரட்டை குழந்தை பிறந்தால் இப்படி ஒரு வழக்கமா? - வைரலாகும் வீடியோ!

சமூகநீதியை படுகொலை செய்த நீங்க அந்த வார்த்தைய கூட சொல்லாதீங்க? - மு.க.ஸ்டாலினை விமர்சித்த அன்புமணி!

மாமியாரை அடித்து கொடுமைப்படுத்திய மருமகள்.. மருமகளின் அம்மாவும் அடித்த சிசிடிவி காட்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments