Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய சித்தராமையா.. நாளை பதவியேற்பு..!

Webdunia
வெள்ளி, 19 மே 2023 (08:03 IST)
கர்நாடக மாநில முதல்வராக பதவி ஏற்கவிருக்கும் சித்தராமையா நேற்று கர்நாடக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியதை அடுத்து நாளை பெங்களூரில் பிரம்மாண்டமாக பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. 
 
சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகியது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக முதல்வர் வேட்பாளர் யார் என்ற குழப்பம் இருந்த நிலையில் நேற்று அதிகாரப்பூர்வமாக சித்தராமையா முதல்வராக பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் கவர்னரை சந்தித்த சித்தராமையா ஆட்சி அமைக்க உரிமை கூறினார் அப்போது டி கே சிவகுமார் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நாளை பெங்களூரில் சித்தராமையா அரசு பதவி ஏற்கும் நிலையில் இந்த பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட ஆறு மாநில முதல்வர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொல்கத்தா ஐஐடி மாணவி பாலியல் பலாத்கார விவகாரம்.. குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..!

ஒரே பெண்ணை மணந்த இரு சகோதரர்கள்.. பாரம்பர்ய சடங்குடன் நடத்தி வைத்த பெரியோர்கள்..!

இன்று நடைபெறவிருந்த தவெக மாவட்ட செயலாளர் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல.. ஈபிஎஸ் ஆவேச பேச்சு..!

மாமனாரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மருமகள்.. சந்தேகம் வராமல் இருக்க உடல் முழுவதும் மஞ்சள் பூச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments