Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்த ராஜினாமா... காலியாகும் காங்கிரஸ் கூடாரம்!

Webdunia
திங்கள், 9 டிசம்பர் 2019 (16:32 IST)
இடைத்தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா பதவியை ராஜினாமா செய்துள்ளார். 
 
கர்நாடகாவில் 15 தொகுதிகளில் இடைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கை முடிவில் 12 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்தது. 
 
இதன் மூலம் கர்நாடகாவில் எடியூரப்பா தனது ஆட்சியை தக்கவைத்துக் கொண்டார். இதனை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். பெரும்பான்மைக்கு 6 இடங்களே தேவைப்பட்ட நிலையில் பாஜக 12 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 
 
பாஜகவை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் 2 உடங்களில் முன்னிலை பெற்றது. குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 1 இடத்தில் முன்னிலை வகித்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் இடைத்தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பை சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். இவரை தொடர்ந்து மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் தினேஷ் குண்டுராவும் ராஜினாமா செய்யவுள்ளார் என தகவ்ல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்கள் போல் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் சிறப்பு துணை தேர்வுகள்: அமைச்சர் தகவல்..!

கல்வி நிதி தர மறுக்கும் வழக்கு: தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்ற உத்தரவு..!

இன்று தவெகவில் இணைந்த அதிகாரி தான் விஜய் வீட்டில் ரெய்டு செய்தவரா? அவரே அளித்த விளக்கம்..!

2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 11 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

சவுதி வருவதற்கு இந்தியர்களுக்கு தடை? பாகிஸ்தானுக்கு அனுமதியா? - போர்தான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments