Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மந்திரவாதி சொன்ன மூடநம்பிக்கை.. பச்சிளங்குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த பெற்றோர்..!

Mahendran
செவ்வாய், 4 மார்ச் 2025 (17:48 IST)
ஒடிசா மாநிலத்தில், பச்சிளம் குழந்தை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மந்திரவாதி அந்த குழந்தைக்குள் தீய சக்தி இருப்பதால் சூடு வைக்க வேண்டும் என்று கூறினார். இதை கேட்ட பெற்றோர்கள், 40 முறை பச்சிளம் குழந்தையின் உடலில் சூடு வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஒரிசா மாநிலம் நவரங்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது. ஒரே ஒரு மாதமே ஆன அந்த பச்சிளம் குழந்தைக்கு சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக, குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் செல்லாமல், அவர்கள் மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றனர்.
 
அப்போது, மந்திரவாதி குழந்தையின் உடலில் தீய சக்தி புகுந்துவிட்டதாக கூறி, அதை வெளியேற்ற, சூடு வைக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதனை நம்பிய பெற்றோர்கள், தீய சக்தியை விரட்டும் நோக்கத்தில், குழந்தையின் தலை மற்றும் வயிறு பகுதிகளில் இரும்புக் கம்பியால் 40 முறை சூடு வைத்தனர்.
 
ஒவ்வொரு முறையும் சூடு வைக்கும் போது, குழந்தை வலி தாங்க முடியாமல் தொடர்ந்து அழுந்தது. பின்னர், குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, குழந்தையின் வயிற்றில் சூடு வைக்கப்பட்டதை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
 
இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, காவல்துறையினர் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி உயர்வு.. ஆனால் விலையில் மாற்றமில்லை..!

ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீமான் - அண்ணாமலை.. ஒருவரை ஒருவர் புகழ்ந்ததால் பரபரப்பு..!

ஒவைசியிடம் ரூ.3000 கோடி வக்பு சொத்து உள்ளது: தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments