Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்.! இனி எல்லா சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும்..!!

Senthil Velan
வெள்ளி, 19 ஜூலை 2024 (17:59 IST)
புதுச்சேரியில் இந்த கல்வியாண்டில் பள்ளிகள் இனி சனிக்கிழமைகளிலும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
புதுச்சேரியில்  கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.  இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகம் இருந்த காரணத்தினாலும், மொகரம் பண்டிகையை முன்னிட்டு புதுவை அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்த காரணத்தினாலும், கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த ஜூலை மாதம் வரை சுமார் 12 வேலை நாட்களில் விடுமுறை விடப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் அந்த 12 நாட்களில் திட்டமிடப்பட்டிருந்த பாடத்திட்டங்கள் முடிக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில், அதை ஈடு செய்ய, எதிர்வரும் 12 சனிக்கிழமைகளில் கட்டாயம் பள்ளிக்கூடம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது புதுவை மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ: ரயில்வே துறையை சீரழித்த பாஜக.! சென்னை மெட்ரோ விரிவாக்கத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை..!!
 
இதுகுறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள புதுவையின் பள்ளி கல்வி இணை இயக்குனர் சிவகாமி, பள்ளிக்கூடம் நடைபெற உள்ள அந்த 12 சனிக்கிழமைகளில், என்னென்ன கிழமைகளுக்கான பாடத்திட்டம் பின்பற்ற வேண்டும் என்பதையும் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

திடீரென சாலையின் நடுவில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்.. வாகனங்கள் சேதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments