Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக சரத்பவார் மீண்டும் போட்டியின்றி தேர்வு

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக சரத்பவார் மீண்டும் போட்டியின்றி தேர்வு
, வியாழன், 11 ஜூன் 2015 (10:58 IST)
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக சரத்பவார் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 

 
தேசியவாத காங்கிரஸ் கட்சி 1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது முதல் சரத்பவார் கட்சியின் தேசிய தலைவராக தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டு வருகிறார்.
 
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 16ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு அக்கட்சியின் 6ஆவது தேசிய கூட்டம் நடைபெற்றது.
 
இந்த கூட்டத்தில், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி, காஷ்மீர், அந்தமான் நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
 
இக் கூட்டத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக சரத்பவார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதை, அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.பி.பிதாம்பர் மாஸ்டர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil