Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பினாமிக்கு வெட்கமில்லாமல் ஆதரவளிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் - கொந்தளிக்கும் கட்ஜூ

Webdunia
வியாழன், 9 மார்ச் 2017 (18:20 IST)
குற்றவாளிகளுக்கு, வெட்கமில்லாமல் ஆதரவு அளிக்கும் அதிமுக கைப்பாவை எம்.எல்.ஏ.,க்களின் வீடு மற்றும் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.


 

இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள கட்ஜூ, “தமிழர்களே! ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தங்களது வீரதீரச் செயல்கள் மூலம் நாட்டையே நீங்கள் வியக்க வைத்தீர்கள். தற்போது, அதே போன்றதொரு மீண்டுமொரு வீரதீரச் செயல்கள் புரிய  வேண்டும் என இந்தியா முழுவதும் விரும்புகிறது.

ஊழல் வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள குற்றவாளி சிறைப்பறவைகளுக்கு, வெட்கமில்லாமல் ஆதரவு அளிக்கும் அதிமுக கைப்பாவை எம்.எல்.ஏ.,க்களின் வீடு மற்றும் அலுவலகம் முன்பு சட்டப்பூர்வமாகவும், அமைதியான முறையிலும் நீங்கள் போராட்டம் நடத்த வேண்டும்.

எம்.எல்.ஏ.,க்கள் எங்கு சென்றாலும், அங்கெல்லாம் அவர்களுக்கு கறுப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அவர்களை சமூகத்தில் புறக்கணிக்க செய்வதுடன், எந்த இடத்திற்கும் அவர்கள் அழைக்கப்படக்கூடாது.

சோழர்களின் வழிவந்த வலிமைமிக்க தமிழ் மக்களின் கோபத்தை எம்.எல்.ஏ.,க்கள் உணரச் செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments