Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாஜ்மஹாலை ஷாஜகான் கட்டவில்லை: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு!

Webdunia
சனி, 1 அக்டோபர் 2022 (08:27 IST)
தாஜ் மஹாலை ஷாஜகான் கட்டியதற்கான எந்த விதமான அறிவியல் பூர்வ ஆதாரங்கள் இல்லை என உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சிறு வயதில் இருந்தே அனைவரும் தாஜ்மஹாலை கட்டியது ஷாஜகான்  தான் என்று படித்து வரும் நிலையில் திடீரென தாஜ் மஹாலை ஷாஜகான் கட்டினார் என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லை என்றும் உண்மை கண்டறியும் குழுவை அமைத்து இதுகுறித்து ஆய்வு செய்யப்படவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் ராஜ்னீஷ் என்பவர் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்துள்ளார் 
 
ஏற்கனவே ராஜ்னீஷ் தாஜ்மஹால் குறித்து தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்ட நிலையில் தற்போது அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படுமா? விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டால் குழு அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments