Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மம்தா வீட்டில் மீன் வறுவல் சாப்பிட்ட ஷாருக்கான்

மம்தா வீட்டில் மீன் வறுவல் சாப்பிட்ட ஷாருக்கான்
, வெள்ளி, 30 மே 2014 (16:06 IST)
7வது ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் ஷாருக்கான், மம்தா பானர்ஜியின் வீட்டுக்கு சென்று வாழ்த்து பெற்றார். மம்தா மீன் வறுவல் கொடுத்து ஷாருக்கானை மகிழ்வித்தார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பாஷா ஆப் பாலிவுட் என்று அழைக்கப்படும் ஷாருக்கான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உரிமையாளராக இருக்கிறார். இந்த அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதையடுத்து ஷாருக்கான் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வீட்டுக்கு சென்றார்.
webdunia
அங்கு மம்தாவை சந்தித்து பேசினார். அப்போது, இறுதி போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற ஷாருக்கானுக்கு வாழ்த்துகளைக் கூறினார். பின்னர், ஷாருக்கானுக்கு மம்தா பானர்ஜி விருந்து கொடுத்தார். பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட வறுவல் மீனை சாப்பிட கொடுத்தார்.
webdunia
விருந்து குறித்து ஷாருக்கான் ட்விட்டரில் கூறும்போது, "மம்தா பானர்ஜி வீட்டில் மீன்வறுவல் சாப்பிட்டது இனிமையாக இருந்தது" என்றார்.
 
மம்தா பானர்ஜி ஃபேஸ்புக்கில், "கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதி போட்டியில் வெல்ல வேண்டும். அதற்காக என் வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil