பாலியல் குற்றவாளி சத்யானந்த சரஸ்வதி சாமியார் கைது! - டெல்லியில் தேடி பிடித்த போலீஸ்!

Prasanth K
ஞாயிறு, 28 செப்டம்பர் 2025 (08:38 IST)

17 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சாமியார் சத்யானந்த சரஸ்வதியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

 

டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியில் தனியார் கல்வியகத்தை நடத்தி வந்த சத்யானந்த சரஸ்வதி எனப்படும் பார்த்தசாரதி, கல்வியகத்தில் படிக்கும் பெண்களிடம் தவறாக நடந்துக் கொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த வாக்குமூலத்தின்படி, பெண்கள் விடுதியின் வாஷ்ரூம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்களை வைத்து சத்யானந்தா பெண்களை தனது மொபைல் போனிலேயே பார்த்து வந்ததாகவும், ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்புவது, இரவு நேரத்தில் அவர் அறைக்கு அழைப்பது என பல வேலைகளை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

 

இதுகுறித்து 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீஸார் தலைமறைவான சத்யானந்த சரஸ்வதியை கைது செய்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு கேட்க வந்த வேட்பாளரை கல்லால் எறிந்து விரட்டிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

பொறுத்திருந்து பாருங்கள்.. எல்லாமே சர்பிரைஸாக நடக்கும்: சசிகலா பேட்டி..!

17 குழந்தைகளை கடத்தி பிணை கைதிகளாக பிடித்து வைத்த நபர்.. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!

காலையில் குறைந்த தங்கம், மாலையில் திடீர் உயர்வு.. தற்போதைய நிலவரம்..!

டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை: ராகுல் காந்தி விமர்சனம்

அடுத்த கட்டுரையில்