Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடாமல் பற்றி எரியும் காட்டுத்தீ - ஏராளமான விலங்குகள் பலி

Webdunia
செவ்வாய், 22 மே 2018 (10:55 IST)
உத்தரகாண்ட் மாநிலத்தில் விடாமல் தொடர்ந்து 5 நாளாக பற்றி எரியும் காட்டுத்தீயில் சிக்கி ஏராளமான வன விலங்குகள் உயிரிழந்துள்ளன.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக வெயில் உச்சத்தை அடைந்துள்ளது. இதன் காரணமாக வனப்பகுதியில் தீ பரவியது. இதில் ஏராளமான மூலிகை மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் செல்போன் டவர்கள் சேதமடைந்தன. தொடர்ந்து 5 வது நாளாக பற்றி எரியும் தீயை அணைக்க போதிய வன ஊழியர்கள் இல்லாத காரணத்தால், தீயை கட்டுக்குள் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
இந்த தீவிபத்தில் சிக்கி ஏராளமான வனவிலங்குகள் இறந்துள்ளன. புகை மூட்டம் காரணமாக பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உடனடியாக தீயை அணைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி வாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments