Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடாமல் பற்றி எரியும் காட்டுத்தீ - ஏராளமான விலங்குகள் பலி

Webdunia
செவ்வாய், 22 மே 2018 (10:55 IST)
உத்தரகாண்ட் மாநிலத்தில் விடாமல் தொடர்ந்து 5 நாளாக பற்றி எரியும் காட்டுத்தீயில் சிக்கி ஏராளமான வன விலங்குகள் உயிரிழந்துள்ளன.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக வெயில் உச்சத்தை அடைந்துள்ளது. இதன் காரணமாக வனப்பகுதியில் தீ பரவியது. இதில் ஏராளமான மூலிகை மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் செல்போன் டவர்கள் சேதமடைந்தன. தொடர்ந்து 5 வது நாளாக பற்றி எரியும் தீயை அணைக்க போதிய வன ஊழியர்கள் இல்லாத காரணத்தால், தீயை கட்டுக்குள் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
இந்த தீவிபத்தில் சிக்கி ஏராளமான வனவிலங்குகள் இறந்துள்ளன. புகை மூட்டம் காரணமாக பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உடனடியாக தீயை அணைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி வாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments