Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெற்றி பெற்றால்தான் திருமணம் : 46 வருடங்களாக 10ஆம் வகுப்பு தேர்வு எழுதும் 77 வயது முதியவர்

வெற்றி பெற்றால்தான் திருமணம் : 46 வருடங்களாக 10ஆம் வகுப்பு தேர்வு எழுதும் 77 வயது முதியவர்
, வெள்ளி, 4 மார்ச் 2016 (18:35 IST)
பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றதற்கு பிறகுதான் திருமனம் செய்து கொள்ள வேண்டும் என்ற வைராக்கியத்துடன் வாழ்ந்து வரும் ஒருவரை பற்றிய சுவாரஸ்யமான செய்தி வெளியாகியிருக்கிறது.


 

 
ராஜஸ்தான் மாநிலம் ஹோகரி கிராமத்தில் வசிப்பர் ஷிவ் சரண்யாதவ்(77). இவர் 1968 ஆம் ஆண்டு முதல் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதி வருகிறார். தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகுதான் திருமணம் என்று அவர் முடிவெடுத்திருப்பதால், 46 வருடங்களாக தேர்வு எழுதி வருகிறார்.
 
ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு பாடத்தில் தோல்வி அடைந்து விடுகிறாராம். கணக்கு பாடம்தான் அவருக்கு மிகவும் சவாலாக இருக்கிறதாம். ஒருமுறை கணக்கில் தேர்ச்சி பெற்று விட்டார். ஆனால் இந்தி மற்றும் ஆங்கில பாடத்தில் தோல்வி அடைந்து விட்டார். கடந்த முறை சமூக அறிவியலில் தேர்ச்சி அடைந்தார். ஆனால் மற்ற அனைத்து பாடங்களிலும் தோல்வி அடைந்தார்.
 
இந்த முறை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று முடிவு செய்த அவர், டியூசன் போய் பயிற்சி எடுத்திருக்கிறாராம். கண்டிப்பாக இந்த வருடம் தேர்ச்சி பெற்று என் மணமகளை சந்திப்பேன் என்று உறுதியாக கூறுகிறார்  77 வயதான பிரம்மச்சாரி.  

Share this Story:

Follow Webdunia tamil