Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாரி கவிழ்ந்து விழுந்த விபத்தில் 17 பேர் பரிதாப பலி

Webdunia
செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (11:25 IST)
மகாராஷ்டிரா மாநிலம் கந்தாலா பகுதியில் சாலையோர தடுப்பில் லாரி மோதியதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
லாரிகளில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கும் போதிலும், மக்கள் பலர் சட்டத்தை மதிக்காமல் லாரிகளில் அபாயகரமான பயணம் மேற்கொள்கின்றனர். அப்படி பயணம் செய்யும் போது விபத்து ஏற்பட்டு, சிலர் பரிதாபமாக உயிரிழக்கின்றனர்.
 
இந்நிலையில் கட்டிட தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு மகாராஷ்டிரா மாநிலம் சதாரா - புனே நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை மினிலாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்பில் பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலே பலியாகியுள்ளனர்.
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், ஈடிபாடுகளில் சிக்கிய 15 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 கேடுகெட்ட தேர்தலா இருக்கும்.. திமுக-பாஜக இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை: மணி

கன்னடம் குறித்து கமல்ஹாசன் பேசியது சரிதான்: சீமான் ஆதரவு

2 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் கொரோனாவால் ஒருவர் பலி: அதிர்ச்சி தகவல்..!

440 ஆண்டுகளுக்கு முன் இறந்தவரின் சமாதி.. திடீரென பக்தர்கள் கூட்டம் வந்ததால் பரபரப்பு..!

இன்ஸ்டாவில் பிரபலம்.. ரூ.1.35 கோடிக்கு சொத்து..! டிஸ்மிஸ் செய்யப்பட்ட பெண் காவல்துறை அதிகாரி..

அடுத்த கட்டுரையில்
Show comments