காவிரி விவகாரத்தில் கருத்து சொன்ன சேவாக்!
காவிரி விவகாரத்தில் கருத்து சொன்ன சேவாக்!
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டதை கண்டித்து கர்நாடகத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது. தமிழகதிலும் ஒரு சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டது.
இதனால் இந்தியாவே பேசும் பொருளாகிவிட்டது காவிரி விவகாரம். இந்த விவகாரத்தில் பலரும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். சிலர் கர்நாடகத்துக்கு ஆதரவாகவும், சிலர் தமிழ்நாட்டுக்கு ஆதரவாகவும் தங்கள் கருத்தை கூறி வருகின்றனர்.
ஆனால் பெரும்பாலானோர் இரு மாநில மக்களையும் அமைதியா இருக்கும்படியாகவும், வன்முறைகளை கைவிட்டு அமைதியான முறையில் எதிர்ப்பை தெரிவியுங்கள் என கூறினர்.
சினிமா பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட்டின் அதிரடி நட்சத்திர வீரர் சேவாக் காவிரி விவகாரத்தில் தன்னுடைய கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அன்பான கர்நாடக, தமிழக மக்களே, நீங்கள் கன்னடர்களாகவோ, தமிழர்களாகவோ இருக்காதீர்கள், மாறாக இந்தியர்களாக இருந்து மற்றவர்களுக்கு உதவுங்கள். அன்பை பரிமாறுங்கள் என கூறியுள்ளார் சேவாக்.