Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி செல்ல உயிரை பணயம் வைக்கும் மாணவர்கள் (வீடியோ)

Webdunia
புதன், 11 ஜூலை 2018 (13:38 IST)
குஜராத் மாநிலத்தில் பள்ளி செல்ல மாணவர்கள் உயிரை பணயம் வைத்து செல்லும் காட்சி வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

 
குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்தில் உள்ள நைகா - பேராய் கிராமங்களுக்கு இடையே தடுப்பணையுடன் கூடிய சிறிய பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலம் இல்லையென்றால் மக்கள் 10 கி.மீ தொலைவு சுற்றி செல்ல வேண்டும். 
 
இந்த பாலம் இரண்டு மாதங்களுக்கு முன் பழுதடைந்துள்ளது. இதுவரை இந்த பாலத்தை சீரமைக்க கிராம நிர்வாகமோ அரசோ முனவரவில்லை. இந்நிலையில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து தடுப்பணையில் உள்ள ஷட்டரின் கதவை பிடித்து தாவி செல்கின்றனர்.
 
இந்த நிகழ்வு வீடியோ யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. பொதுமக்கள், அதிகாரிகள் இந்த பாலம் விவகாரத்தில் கூடுதல் அக்கறை எடுத்து உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். 
 
மழை பெய்து வருவதால் பாலடம் சீரமைப்பு பணியை உடனடியாக தொடங்க முடியவில்லை என்றும் விரைவில் சீரமைக்கும் பணி தொடங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments