Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாஜ்பாய் இறந்துவிட்டதாக அஞ்சலி செலுத்தி பள்ளிக்கு விடுமுறை அளித்த தலைமை ஆசிரியர்

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2015 (14:13 IST)
ஒடிசாவில் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர், வாஜ்பாய் இறந்து விட்டதாக அறிவித்து, இரங்கல் கூட்டம் நடத்தி, பின் பள்ளிக்கு விடுமுறையும் அளித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஒடிசாவில் ஒரு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருப்பவர் கமலகண்ட தாஸ். இவர், ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்கும் ஒரு நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டார். அங்கு ஒரு ஆசிரியர் இவரிடம், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறந்துவிட்டதாக  தவறான தகவலை கூறினார்.
 
இதனை நம்பிய தாஸ், நேராகப் பள்ளிக்குச் சென்று மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களை அழைத்து வாஜ்பாய்க்கு இரங்கல் கூட்டம் நடத்தி, அஞ்சலி செலுத்தியதோடு மட்டுமல்லாமல், பள்ளிக்கும் விடுமுறையும் அறிவித்து விட்டார்.
 
இதனை அறிந்த உள்ளூர்காரர்கள், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் சனதன் மாலிக்கிடம் புகார் அளித்தனர். இது பற்றி கருத்துக் கூறிய கலெக்டர் “அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளேன். தேவைப்பட்டால் அவருக்கு எதிராக குற்ற நடவடிக்கையும் எடுக்கப்படும்” என அறிவித்துள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments