Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கட்டணம் செலுத்தாத தந்தைக்கு அவமானம் - 9 வகுப்பு மாணவி தூக்கு

கட்டணம் செலுத்தாத தந்தைக்கு அவமானம் - 9 வகுப்பு மாணவி தூக்கு
, வியாழன், 28 ஜூலை 2016 (18:14 IST)
கல்வி கட்டனம் செலுத்தாததால் பள்ளி நிர்வாகம் தந்தையை அவமானப்படுத்தியதால் வருத்தம் அடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

 
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருபவர் பையா ரத்தன் சிங் தோமர். இவரது மகள் ஜாஸ்மின், சேவாநகர் தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார்.
 
இந்நிலையில், மகளின் கல்விக் கட்டனம் செலுத்த இயலாததால் தோமரை பள்ளி ஆசிரியர்கள் அவமானப்படுத்தி உள்ளனர். இதனைத் தொடர்ந்து தந்தையை அவமானப்படுத்தியதால் கவலையில் இருந்த மாணவி ஜாஸ்மின் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இதுகுறித்து சிஹானி கேட் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.
 
இந்நிலையில் ஆத்திரம் அடைந்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தில் ஆசிரியர்களை கடுமையாக தாக்கி உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முத்தத்தால் வந்த வினை: மகளுக்கு மொட்டை அடித்து வீட்டு சிறையில் வைத்த தந்தை