Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 வயது சிறுமியை பள்ளி கழிவறையில் வைத்து கற்பழித்த ஊழியர்!

4 வயது சிறுமியை பள்ளி கழிவறையில் வைத்து கற்பழித்த ஊழியர்!

Webdunia
புதன், 9 ஆகஸ்ட் 2017 (13:10 IST)
மும்பையில் 4 வயது சிறுமியை பள்ளிக்கூட ஊழியர் ஒருவர் பள்ளியின் கழிவறையில் வைத்து கற்பழித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அந்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.


 

 
 
மும்பை மலாடு கிழக்கு பகுதியில் 4 வயது சிறுமி ஒருவர் தனியார் பள்ளியில் படித்து வந்தார். அந்த சிறுமி சம்பவத்தன்று சிறுநீர் கழிக்க கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பள்ளியில் உதவியாளராக பனியாற்றும் விஷால் அந்த கழிவறையில் நின்றுள்ளார்.
 
4 வயது சிறுமி கழிவறைக்குள் சென்றதும் அந்த சிறுமியின் வாயை பொத்தி கழிவறையில் வைத்தே கற்பழித்துள்ளார் ஊழியர் விஷால். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி நடந்த சம்பவம் குறித்து வீட்டிற்கு சென்று தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
 
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அருகில் உள்ள காவல்நிலையத்துக்கு சென்று புகார் அளித்தனர். இதனையடுத்து சிறுமியை கற்பழித்ததாக வழக்கு பதிவு செய்த போலீசார் பள்ளியின் ஊழியர் விஷாலை கைது செய்தனர். மேலும் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இந்நிலையில் சிறுமி பள்ளியின் ஊழியரால் கற்பழிக்கப்பட்ட சம்பவத்தை அறிந்து ஆத்திரமடைந்த மற்ற மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் சிறுமியின் குடும்பத்தினர் அந்த பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து வந்த போலீசார் மாணவர்களின் பெற்றோர்களை சமாதனம் செய்து அனுப்பி வைத்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments