பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 15 வரை மூடல்: அதிரடி அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 9 ஜனவரி 2022 (10:08 IST)
பிப்ரவரி 15ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்படும் என மகாராஷ்டிர மாநில பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது என்பதும் இதனை அடுத்து அம்மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஏற்கனவே பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் தற்போது பிப்ரவரி 15ஆம் தேதி வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மகாராஷ்டிர மாநில பள்ளி கல்வித்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளி கல்லூரிகள் மூடப்படுவதாகவும், கல்லூரிகள், பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments