Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனுதாரர் வீட்டிலிருந்தே விசாரணைகளை லைவ் பார்க்கலாம்; உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு

Webdunia
திங்கள், 9 ஜூலை 2018 (15:38 IST)
உச்ச நீதிமன்ற விசாரணைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உச்சநீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது.

 
அரசியல் சாசனம் மற்றும் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் விசாரணையை உச்சநீதிமன்றம் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று மூத்த வழக்கறிஞரான் இந்திரா ஜெய்சிங் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் விசாரணைக்கு வந்தது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது மனுதாரரின் கோரிக்கையை ஏற்றது உச்சநீதிமன்றம். இதுகுறித்து திபக் மிஸ்ரா கூறுகையில், தனது தரப்பு வழக்கறிஞர் எப்படி வாதாடுகிறார் என்பதை மனுதாரர் வீட்டில் இருந்தபடியே பார்க்க இது உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
 
இந்த விவகாரம் தொடர்பாக பார் சங்கத்தின் பரிந்துரையையும் உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அப்போது அட்டார்னி ஜெனரல் வேணுகோபால் இதுகுறித்து விரிவான வழிகாட்டும் நெறிமுறைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments