Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அபராத தொகையையே கோடியில் சம்பாதித்த எஸ்பிஐ....

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2017 (20:56 IST)
சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை குறித்த அறிவிப்பையும், அதற்கான அபராதங்கள் குறித்தும் கடந்த ஏப்ரலில் எஸ்பிஐ சில அறிவிப்புகளை வெளியிட்டது. 
 
வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்க வேண்டும் அப்படி இல்லையென்றால்  பராமரிக்காதவர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவித்து அபராத தொகையையும் வசூலித்துள்ளது. 
 
2017-18 ஆம் நிதியாண்டில் வாடிக்கையாளர்களிடம், எஸ்பிஐ வங்கி ரூ.1771.77 கோடி அபராதம் வசூலித்துள்ளதாக மத்திய நிதித்துறை இணைமந்திரி ஷிவ்பிரதாப் சுக்லா தெரிவித்துள்ளார். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இது குறித்து அவர் தெரிவித்தார்.
 
மேலும் அவர் கூறியதாவது, எஸ்பிஐ வங்கி 2016-17 ஆம் நிதியாண்டில் வாடிக்கையாளர்களிடம் அபராதமே வசூலிக்காத நிலையில், 2017-18 ஆம் நிதியாண்டில் வாடிக்கையாளர்களிடம் 1771.77 கோடி ரூபாய் அபராதம் வசூலித்துள்ளது. 
 
மொத்தமுள்ள 21 வங்கிகளில் எஸ்பிஐ வசூலித்த அபராத தொகைதான் அதிகம். எஸ்பிஐ வங்கியை தொடர்ந்து பஞ்சாப் நேசனல் வங்கி, ரூ.97.34 கோடி அபராதம் வசூலித்து இரண்டாவது இடத்தில் உள்ளது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்கலாம்! மத்திய அரசு

இந்தியா எடுத்த ஒரு சின்ன முயற்சி.. ₹8.5 லட்சம் கோடி முதலீடு, 10 லட்சம் வேலைவாய்ப்புகள்

இந்தியாவுடன் ஏற்பட்ட புதிய நட்பு.. பாகிஸ்தானை கைவிரித்தது சீனா.. முக்கிய திட்டம் ரத்து..!

எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார் என நான் சொல்லவே இல்லை: பிரேமலதா

ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்று சிறப்புமிக்க முடிவை வரவேற்கிறேன்: எடப்பாடி பழனிசாமி

அடுத்த கட்டுரையில்
Show comments