Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஆவணம் இல்லாம மாத்தலாம்?! – எஸ்பிஐ வங்கி அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 21 மே 2023 (14:35 IST)
இந்தியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரூபாய் நோட்டுகளை மாற்ற ஆவணங்கள் தேவையில்லை என எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.

இந்தியாவில் 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு செய்யப்பட்டபோது ரூ.2000 ஆயிரம் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பின்னர் கடந்த சில ஆண்டுகளாக புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்த ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றுவதற்கான விதிமுறைகளை பல வங்கிகளும் அறிவித்துள்ளன. வங்கிகளில் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு ரூ.2000 நோட்டுகள் மட்டுமே மாற்ற முடியும் என்றும், அதற்கு ஆவணங்கள் தேவை என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது எஸ்பிஐ வங்கி கிளை வங்கிகளுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் ரூ.2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற எந்த ஆவணமும் தேவையில்லை என்று தெரிவித்துள்ளது. ஒரு நபர் ஒரு நாளைக்கு ரூ.20,000 வரை இவ்வாறு ஆவணங்கள் இன்றி மாற்றிக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பணத்தை மாற்ற விரும்புபவர்கள் எந்த சிரமும் இன்றி எஸ்பிஐ வங்கிகளில் ரூ.2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments