Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியுரிமை திருத்த சட்டம் பற்றி கருத்து தெரிவித்த கங்குலி மகள் – தாதாவின் ரியாக்‌ஷன் !

Webdunia
வியாழன், 19 டிசம்பர் 2019 (13:28 IST)
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கங்குலியின் மகள் சனா கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் மகள் சனா சமூகவலைதளங்களில் தீவிரமாக இயங்கி வருபவர். இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கம் முழுவதும் போராட்டம் வெடிக்க அதற்கு ஆதரவாகம் சட்ட மசோதாவுக்கு எதிராகவும் அவர் தனது டிவிட்டரில் எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கின் தெ எண்ட் ஆஃப் இந்தியா என்ற புத்தகத்தில் இருந்து மேற்கோள் காட்டி கருத்து தெரிவித்தார்.

அதனைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் சனாவின் தந்தை கங்குலி தனது டிவிட்டரில் ‘இந்த பிரச்சனைகளில் இருந்து சனாவை விட்டுவிடுங்கள். இந்த பதிவு உண்மை இல்லை. அவள் இளம் பெண். அரசியலை பற்றி சனாவுக்கு எதுவும் தெரியாது.’ எனக் வேண்டுகோள் விடுக்கும் விதமாக பேசியுள்ளார். அதன் பின் அந்த பதிவும் நீக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments