Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா காரணமாக தேர்தல் ஒத்திவைப்பா? – சர்ச்சைக்கு சத்யபிரதா சாகு விளக்கம்!

Webdunia
புதன், 17 மார்ச் 2021 (13:23 IST)
இந்தியாவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா என்பது குறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு விளக்கமளித்துள்ளார்.

தமிழகம், குஜராத், கேரளா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் கொரோனா பாதிப்புகளுக்கு இடையே 5 மாநிலங்களுக்கான தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயமும் உள்ளது. கொரோனா காரணமாக தேர்தல் தேதி ஒத்திவைக்கப்படலாம் என சமூக வலைதளங்களில் பேசிக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள தமிழக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு “கொரோனா காரணமாக தேர்தலை ஒத்திவைப்பது குறித்து தேர்தல் ஆணையம் எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை. திட்டமிட்ட தேதியில் தேர்தல் நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

இந்தியா - பாகிஸ்தான் போரில் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.. டிரம்ப் மீண்டும் சர்ச்சை..!

கொழுந்தனுடன் கள்ளக்காதல்.. கணவனை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments