Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா காரணமாக தேர்தல் ஒத்திவைப்பா? – சர்ச்சைக்கு சத்யபிரதா சாகு விளக்கம்!

Webdunia
புதன், 17 மார்ச் 2021 (13:23 IST)
இந்தியாவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா என்பது குறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு விளக்கமளித்துள்ளார்.

தமிழகம், குஜராத், கேரளா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் கொரோனா பாதிப்புகளுக்கு இடையே 5 மாநிலங்களுக்கான தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயமும் உள்ளது. கொரோனா காரணமாக தேர்தல் தேதி ஒத்திவைக்கப்படலாம் என சமூக வலைதளங்களில் பேசிக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள தமிழக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு “கொரோனா காரணமாக தேர்தலை ஒத்திவைப்பது குறித்து தேர்தல் ஆணையம் எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை. திட்டமிட்ட தேதியில் தேர்தல் நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பசி, வேலையின்மை இருந்தால் இந்தியாவிலும் புரட்சி வெடிக்கும்" - ப.சிதம்பரம் பேச்சு பரபரப்பு

இந்தியா, சீனா மீது கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா அழுத்தம்.. ஜி7 நாடுகள் ஏற்குமா?

திருச்சியில் விஜய் நடத்தும் முதல் கூட்டம்.. கட்டுக்கடங்காத கூட்டத்தால் ஸ்தம்பிப்பு..!

மாணவர்களின் கண்ணில் Fevikwik ஊற்றிய சக மாணவர்கள்; தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

கொள்கை இல்லாமல் கூக்குரலிட்டு, கும்மாளம் போடும் கூட்டமல்ல திமுக: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments