Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் பதவியை நிராகரித்த சாமியார்: துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

Webdunia
செவ்வாய், 12 ஜூன் 2018 (16:08 IST)
ஆன்மீக தலைவர் பையூஜி மகாராஜ் இன்று இந்தூரில் தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இந்த சம்பவம் அவரது பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் இவரது ஆன்மீக சொற்பொழிவுகள் மூலம் பிரபலமானவர் பையூஜி மகாராஜ். இவரது அசிரமம் இந்தூர் நகரத்தில் அமைந்துள்ளது. 
 
ஈநிலையில், இவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். மத்திய பிரதேசத்தில் கடந்த ஏப்ரல் மாதம் இந்து சாமியார்கள் 5 பேருக்கு திடீரென இணை அமைச்சராக்கினார். இவர்களில் ஒருவர் பையூஜி மகாராஜ். ஆனால் தமக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என நிராகரித்துவிட்டார். 
 
இவரது தற்கொலை தொடர்பாக வேறு எந்த விவரமும் தெரியவில்லை. எதற்காக தற்கொலை செய்துக்கொண்டார் என்பதற்கான காரணமும் தெரியவில்லை. இந்த சோக நிகழ்வு குறித்து கூடுதல் விவரங்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments