சாய் பாபவுக்கு சானிடைசரில் அலங்காரம்: வைரல் புகைப்படம்!

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (13:29 IST)
பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள சாய்பாபா கோவிலில் சாய்பாபாவுக்கு மாஸ்க் மற்றும் சானிடைசர் பாட்டில்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 43,654  பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,14,84,605 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா மூன்றாம் அலை இன்னும் ஓரிரு வாரங்களில் வரக்கூடும் என்று எய்ம்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள சாய்பாபா கோவிலில் கொரோனாவில் இருந்து மக்கள் விடுபடவும், இந்தியாவில் 3 வது அலை உருவாகாமல் இருக்கவும் பிரார்த்தனை செய்து சாய்பாபாவுக்கு 3,00,000 லட்சம் மாத்திரைகள், 10000 முகக்கவசங்கள், 2000 சானிடைசர் பாட்டில்கள் மற்றும் உணவு தானியங்கள், பழங்கள், மற்ற உணவு பொருட்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆண்கள் பற்றாக்குறை எதிரொலி.. ஒரு மணி நேரத்திற்கு ஆண்களை வாடகைக்கு எடுக்கும் பெண்கள்..!

இண்டிகோ விமானம் ரத்து எதிரொலி: காணொளி காட்சி மூலம் ரிஷப்சனில் கலந்து கொண்ட மணமக்கள்..!

தனியார்களை நம்பி, அதுவும் 2 நிறுவனங்களை மட்டும் நம்பினால் இப்படித்தான்.. இண்டிகோ விவகாரம் குறித்து எச்சரிக்கை..!

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை தொடரும்: இன்று கனமழைகு வாய்ப்பு எங்கே?

திருப்பரங்குன்றம் விவகாரம்: திமுக எம்.பி.க்களின் கோரிக்கை மாநிலங்களவையின் நிராகரிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments