Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சச்சின் டெண்டுல்கர், சமூகப் பணிகளில் ஈடுபட ஆர்வம்

சச்சின் டெண்டுல்கர், சமூகப் பணிகளில் ஈடுபட ஆர்வம்
, செவ்வாய், 23 செப்டம்பர் 2014 (10:52 IST)
ஓய்வு பெற்ற இந்திய அணியின் முன்னால் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், சமூகப் பணிகளில் ஈடுபட விரும்புவதாக கூறியுள்ளார்.
 
சதத்தில் சதம் கண்ட இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின், பல்வேறு சமூக நல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
 
மேலும், தொண்டு நிறுவனங்கள் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அவர் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
 
இந்நிலையில் புனேயில் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றில் சச்சின் டெண்டுல்கர் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், “என் வாழ்க்கையின் முதல் இன்னிங்ஸ் பரபரப்பு, மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தது. இப்போது வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்சில் சமூகப் பணிகளில் ஈடுபட விரும்புகிறேன்.
 
மேலும் ஏழை மக்களுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறேன். நான் என்னதான் வேலை செய்தாலும் எனக்கு உங்கள் ஆதரவு தேவைப்படுகிறது“. என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil