Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சங்கர் மஹாதேவனுடன் இணைந்து பாடிய சச்சின் டெண்டுல்கர்

Webdunia
செவ்வாய், 29 செப்டம்பர் 2015 (11:38 IST)
தூய்மை இந்தியா திட்டத்திற்கான தேசியப் பாடலுக்காக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், சங்கர் மஹாதேவனுடன் இணைந்து பாடியுள்ளார்.
 

 
கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ’தூய்மை இந்தியா’ திட்டத்தை அறிமுகம் செய்தார். இந்தத் திட்டத்தில் பங்கேற்குமாறு சச்சின் தெண்டுல்கர், பிரியங்கா சோப்ரா, கமல்ஹாசன், சசி தரூர் உள்பட 9 பிரபலங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
 
சச்சின் டெண்டுல்கரும், பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று 'தூய்மை இந்தியா' திட்டத்தில் இணைந்து மும்பையில் உள்ள ஒரு சாலையினை சுத்தம் செய்தார்.
 
இந்நிலையில், தூய்மை இந்தியா திட்டம் ஓராண்டு நிறைவடைய இருப்பதையொட்டி அதற்கான தேசிய பாடல் சங்கர்-எஷான்-லாய் அவர்களால் உருவாக்கப்பட்டது. இதில் சங்கர் மஹாதேவனுடன் இணைந்து சச்சின் டெண்டுல்கரும் சில வரிகளை பாடியுள்ளார்.
 
இந்த பாடலை கவிஞர் பிரசூன் ஜோஷி எழுதியுள்ளார். இந்த பாடல் காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

உலகில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பூனை? எங்கே தெரியுமா?

வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன்: ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு.. புதிய அதிபராகிறார் முகமது முக்பர்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை: ஊடகங்கள் அதிர்ச்சி தகவல்..!

சிபிஐ, அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும்: அகிலேஷ் யாதவ் ஆவேச பேச்சு..!

Show comments