Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சங்கர் மஹாதேவனுடன் இணைந்து பாடிய சச்சின் டெண்டுல்கர்

சங்கர் மஹாதேவனுடன் இணைந்து பாடிய சச்சின் டெண்டுல்கர்
, செவ்வாய், 29 செப்டம்பர் 2015 (11:38 IST)
தூய்மை இந்தியா திட்டத்திற்கான தேசியப் பாடலுக்காக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், சங்கர் மஹாதேவனுடன் இணைந்து பாடியுள்ளார்.
 

 
கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ’தூய்மை இந்தியா’ திட்டத்தை அறிமுகம் செய்தார். இந்தத் திட்டத்தில் பங்கேற்குமாறு சச்சின் தெண்டுல்கர், பிரியங்கா சோப்ரா, கமல்ஹாசன், சசி தரூர் உள்பட 9 பிரபலங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
 
சச்சின் டெண்டுல்கரும், பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று 'தூய்மை இந்தியா' திட்டத்தில் இணைந்து மும்பையில் உள்ள ஒரு சாலையினை சுத்தம் செய்தார்.
 
இந்நிலையில், தூய்மை இந்தியா திட்டம் ஓராண்டு நிறைவடைய இருப்பதையொட்டி அதற்கான தேசிய பாடல் சங்கர்-எஷான்-லாய் அவர்களால் உருவாக்கப்பட்டது. இதில் சங்கர் மஹாதேவனுடன் இணைந்து சச்சின் டெண்டுல்கரும் சில வரிகளை பாடியுள்ளார்.
 
இந்த பாடலை கவிஞர் பிரசூன் ஜோஷி எழுதியுள்ளார். இந்த பாடல் காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil