நாளை மறுநாள் சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு.. நிறைபுத்தரிசி பூஜை தேதியும் அறிவிப்பு..!

Siva
ஞாயிறு, 27 ஜூலை 2025 (13:25 IST)
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, நிறைபுத்தரிசி  பூஜைக்காக நாளை மறுநாள், அதாவது ஜூலை 29 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த பூஜை ஜூலை 30 ஆம் தேதி நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நிறைபுத்தரிசி  பூஜை சிறப்பாக கொண்டாடப்படும். இந்த பூஜைக்காக, பாரம்பரிய முறைப்படி பாலக்காடு மற்றும் கொல்லம் பகுதிகளிலிருந்து ஐயப்ப சேவா சங்கத்தினர் நெற்கதிர் கட்டுகளை சபரிமலைக்கு எடுத்து வருவார்கள்.
 
சபரிமலையில் பயிரிடப்பட்டுள்ள நெற்கதிர்களும் அறுவடை செய்யப்பட்டு, அந்த நெற்கதிர்களால் சிறப்பு பூஜைகள் செய்யப்படும். நிறைபுத்தரிசி  பூஜை வழிபாட்டிற்கு பிறகு, அன்றைய தினம் இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும் என்று மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.1 லட்சத்தை நெருங்குகிறது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.1,360 உயர்வு..!

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments